மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்த வாலிபர் கைது

திருச்சி, ஏப்.2: மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகேயுள்ள திட்டக்கூர் குட்டிக்குடியேந்தல் பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன் (49). இவர் கடந்த மார்ச் 30ம் தேதி நள்ளிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, பிட்ஏர் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை, விமான நிலையத்தில் இமிகிரேஷசன் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அவர் போலி ஆவணம் மூலம் தனது பிறந்த தேதியை அவரது பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்திருந்தது தெரியவந்தது. இது குறித்து இமிகிரேஷசன் அதிகாரி அளித்த புகாரின் பேரில், ஏர்போட் போலீசார் வழக்குப் பதிவு செய்து செபாஸ்டியனை கைது செய்தனர்.

The post மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: