மக்களவை தேர்தல் முன்னேற்பாடு சிவகிரி தாலுகாவில் ஆய்வுக்கூட்டம்

சிவகிரி,ஏப்.2: சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான அனிதா தலைமை வகித்தார். தாசில்தார் ரவிக்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் ரவி கணேஷ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உதவி அலுவலர் தெய்வ சுந்தரி, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப் இன்ஸ்பெக்டர்கள் சஞ்சய் காந்தி, அவிவீனா, வரதராஜன், தேர்தல் உதவியாளர் மணிகண்டன், பறக்கும் படை அலுவலர்கள், நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள், தேர்தல் கட்டுபாட்டு அறை அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர்தல் உதவியாளர் குமார் நன்றி கூறினார்.

The post மக்களவை தேர்தல் முன்னேற்பாடு சிவகிரி தாலுகாவில் ஆய்வுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: