அதில், கே.வெங்கடேஷ் மீது செங்குன்றம் மற்றும் ஆவடி குற்ற பிரிவில்10 வழக்குகளும், ஆந்திராவில் 49 வழக்குகளும் உள்ளது. இவருடைய பெயர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் உள்ளது. செம்மரக் கடத்தல், துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து என பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும். செம்மர கடத்தல் வழக்குகளும் இருப்பதால் போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
The post 59 வழக்குகளுடன் சரித்திர குற்ற பதிவேட்டில் இருக்கும் பாஜ ஓபிசி பிரிவு செயலருக்கு போலீஸ் பாதுகாப்பு தர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.