ஆந்திர: ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.31 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாடிப்பத்திரி நகரைச் சேர்ந்த ஷேக் மஸ்தான் உள்பட 2 பேரிடம் இருந்து ரூ.1.31 கோடியை பறக்கும்படை பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்த ரூ.1.31 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.