கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்த மேயர் ஜெகன் பெரியசாமி: பூங்காவில் நடைப்பயிற்சி செய்தவர்களிடமும் வாக்கு வேட்டை

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவை தேர்தலில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து திமுக மேயர் ஜெகன் பெரியசாமி கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள முத்துநகர் கடற்கரை பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுகவினர் கனிமொழிக்கு ஆதரவாக தீவிர பரப்புரை மேற்கொண்டனர். பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மக்களிடம் அவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடிய மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களிடம் வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா வீங்கிய மண்டியில் பணியாளர்களுடன் வேலை செய்து நூதன முறையில் பரப்புரை மேற்கொண்டார்.

திண்டுக்கல் கரூர் புறவழி சாலையில் உள்ள வெங்காய மார்கெட்டிற்கு சென்ற திலகபாமா அங்கிருந்த பெண்களுடன் சேர்ந்து வெங்காயம் தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டவாறு மாம்பழ சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். நாமக்கல்லில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி எம்.ஜி.ஆர் பாடல் பாடி அசத்தினார். சிங்கிலிபட்டி அருகே தமிழ்மணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது வேப்பமர நிலத்தடியில் இருந்த மூதாட்டி ஒருவர் மைக்கில் தெலுங்கு பாடலை பாடினார். அங்கு சென்ற அதிமுக வேட்பாளர் தமிழ்மணி எம்.ஜி.ஆர் பாடலை பாட அவருடன் பெண் ஒருவரும் சேர்ந்து பாடியதை தொண்டர்கள் கரஒலி எழுப்பி ரசித்தனர். கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மாங்கரை பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுடன் இணைந்து ராமச்சந்திரன் நடனமாடி வாக்குசேகரித்தார்.

The post கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்த மேயர் ஜெகன் பெரியசாமி: பூங்காவில் நடைப்பயிற்சி செய்தவர்களிடமும் வாக்கு வேட்டை appeared first on Dinakaran.

Related Stories: