இவ்விவகாரங்கள் தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், டெல்லி உயர் நீதிமன்றங்களில் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. ஆனால் காங்கிரஸ் கோரிக்கை ஏற்கப்படாததால், தற்போது காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை நோட்டீசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூ.1700 கோடி வசூல் செய்வதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கமாட்டோம் என்றும், ஜூன் 2 வாரத்துக்கு பிறகு வழக்கு விசாரணையை மேற்கொள்ளுமாறு அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இதனை பதிவு செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி தரக்கூடாது என வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிக்கு எதிராக கெடுபிடி நடவடிக்கைகள் கூடாது: வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு!! appeared first on Dinakaran.