இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; ஜெயலலிதா காலத்தில் அதிமுக-விற்கு உயிர் கொடுத்தது மட்டுமின்றி பழனிசாமியை முதலமைச்சராக தொடர வைத்ததும் பாமக தான். ஆனால் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பழனிசாமி துரோகம் செய்து விட்டார். அதிமுகவுக்கு உயிர் கொடுத்து, பழனிசாமியை முதலமைச்சராக தொடர வைத்ததுதான் நாங்கள் செய்த துரோகமா?. 2019-ல் 22 தொகுதி இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது; அதில் 5 தொகுதி பாமக வால் வெற்றி பெற்றீர்கள் என்று விமர்சத்துள்ளர்.
The post ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்கு உயிர் கொடுத்ததே பாமக தான்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.