கொடைக்கானலில் உள்ள ஆபத்தான சுற்றுலா இடங்களுள் இந்தப் பகுதியும் ஒன்று. டால்பின் மீனின் மூக்குப்பகுதி போன்று இந்த பாறை அமைந்துள்ளதால் இந்த இடம் இந்த பெயர் பெற்றுள்ளது. ஆபத்தை உணராத தனராஜ் செல்ஃபி எடுக்கும் நோக்கத்துடன் டால்பின் நோஸ் பாறை பகுதியில் முனைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விட்டார்.
தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்து கயிறு கட்டி 100 அடி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் தனராஜை உயிருடன் மீட்டனர். அவருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. படுகாயமடைந்த தனராஜை உயிருடன் தீயணைப்பு துறையினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
The post கொடைக்கானல் டால்பின் நோசில் செல்பியால் விபரீதம் நூறு அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி வாலிபர்: 4 மணிநேர போராட்டத்திற்கு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.