இதையடுத்து பக்தர்கள் அம்மனுக்கு முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், பூத்தட்டு, அக்கினிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் படுகளம் போடுதல், குட்டி கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. பிற்பகலில் பந்தய கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு போட்டி போட்டு கழுமரத்தில் ஏறினர். கழுமரத்தின் உயரத்தில் ஏறி அடையாள குறியீட்டை முதலில் தொட்ட இளைஞருக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று அம்மன் பூஞ்சோலை எனும் இருப்பிடம் சென்றடைந்தார்.
The post நத்தம் அருகே கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறி அசத்திய இளைஞர்கள் appeared first on Dinakaran.