கூட்டத்திற்கு சைதாப்பேட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுகுமாரன் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் நடந்த சாலையின் இருபுறமும் தேர்தல் விதிகளை மீறி சேதப்படுத்தி கொடி கம்பங்கள் நட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி கார்த்திகேயன், குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் சைதாப்பேட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுகுமாரன் மீது பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தேர்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்கு appeared first on Dinakaran.