முதியவர்கள் மற்றும் நடக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக இக்கோயிலில் கடந்த மார்ச் 8ம் தேதி ரோப் கார் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. இந்த ரோப் கார் வசதி மக்களிடையே பெரிதும் ஈர்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் ரோப்கார் பராமரிப்பு பணிகளுக்காக ஏப்ரல் 3ம் தேதி ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை இயங்காது. 4ம் தேதி முதல் ரோப்கார் சேவை வழக்கம்போல் இயங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப் கார் சேவை 3ம் தேதி இயங்காது: கோயில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.