வண்டலூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

கூடுவாஞ்சேரி: தாம்பரம் அடுத்த நசரத்பேட்டை வரதராஜபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் எத்திராஜ் (43). இவர் சம்பவத்தன்று நள்ளிரவில் வண்டலூர்-மீஞ்சூர் சாலை நசரத்பேட்டை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியானார். இதேபோல், வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம், கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (67). இவர் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி தனது மிதிவண்டியில் நேற்றுமுன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த இரண்டு விபத்து குறித்து பொத்தேரியில் உள்ள போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வண்டலூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: