தேர்தல் பணிகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

திருப்போரூர்: கேளம்பாக்கம் ஊராட்சியில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அடுத்த மாதம் ஏப்ரல் 19ம்தேதி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளராக செல்வம் போட்டியிடுகிறார். கேளம்பாக்கம் ஊராட்சி இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில், மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. திமுக திருப்போரூர் சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் தலைமை தாங்கினார். கேளம்பாக்கம் ஊராட்சி திமுக கிளை செயலாளர்கள் பாளையம், அன்பு, அசுந்தன், பிரபு, ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன், கேளம்பாக்கம் நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், மாரி, மனிதநேய மக்கள் கட்சியின் திருப்போரூர் ஒன்றிய நிர்வாகிகள் ஷேக் அப்துல் காதர் அன்சாரி, அ.உமர், ஷேக் முகமத், இந்திய முஸ்லிம் லீக் நிர்வாகி சர்தார், காங்கிரஸ் கட்சியின் கேளம்பாக்கம் நிர்வாகி முத்து, இந்திய கூட்டணி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். திமுக வேட்பாளரின் வெற்றிக்கு உழைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

The post தேர்தல் பணிகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: