அழகு பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம்

கோத்தகிரி, மார்ச் 27: கோத்தகிரி கடைவீதி பஜார் பகுதியில்  அழகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் இங்கு பூ குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 31ம் தேதி வரை மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

விழாவில் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று நேற்று காலை 6 மணிக்கு விநாயகர் கோயிலில் இருந்து அம்மன் அழைப்பு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு மேல் பூ குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள், பள்ளி மாணவ, மாணவியர் அதிகமாக பூ குண்டம் இறங்கினர். பின்னர், அபிஷேக பூஜைகள் மற்றும் அலங்கார ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post அழகு பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் appeared first on Dinakaran.

Related Stories: