முதியவர் தூக்கிட்டு தற்கொலை

செய்யூர்: செய்யூர் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த கடப்பாக்கம் புதுதோட்டம் பகுதியில் உள்ள ஒரு மாமரத்தில் நேற்று காலை அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில் சடலமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் சூனாம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post முதியவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: