குளிக்க சென்றபோது பரிதாபம் கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

செய்யூர்: செய்யூர் அருகே கடலில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக பலியாகினர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த பவுஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பிரவீன் (17). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த முகமது சாதிக் (16). இவர்கள் இருவரும் செய்யூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 11ம் வகுப்பு பொது தேர்வுகள் நிறைவடைந்தநிலையில் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் பனையூர் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள கடலில் குளித்து கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்கி மூழ்கியநிலையில் சடலமாக கரை ஒதுங்கினர். இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் செய்யூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், விரைந்து சென்ற போலீசார் இறந்த பிரவீன், முகமது சாதிக் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post குளிக்க சென்றபோது பரிதாபம் கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: