இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோவில் தெரு, ஊமை மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் ஏழை தொழிலாளர்கள் மற்றும் இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் வீட்டில் உள்ள மின்விசிறிகள், மிக்சி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்கள் பழுதாகி நாசம் அடைந்து வருகின்றன.
இரவு நேரத்தில் கொசுக்கடி தாங்க முடியாமல் பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள், நோய்வாய்ப்பட்டோர், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் தூக்கமின்றி தவியாய் தவித்து வருகின்றோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த பகுதி மக்களுக்கு என்று தனியாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தரக்கோரியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கடந்த பல ஆண்டுகளாக மனு கொடுத்து வலியுறுத்தி வருகின்றோம். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றனர்.
The post கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.