இவ்வழக்கு தொடர்பாக, சென்னை, எழும்பூர், CCB அண்டு CBCID நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி இளம்பரிதி மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால், குற்றவாளி இளம்பரிதிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கனம் எழும்பூர் CCB அண்டு CBCID நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் தொடர்புடைய லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வராஜ் என்பவர் ஆஜராகி சிறப்பாக வாதாடினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி விசாரணை பிரிவு -2 காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.
The post ரூ.2 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை..!! appeared first on Dinakaran.