கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது

சின்னசேலம், மார்ச் 26: சின்னசேலம் பகுதியில் தேர்தலை முன்னிட்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தேவராஜ் அனைத்து கிராமங்களிலும் சாராய ரெய்டு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் நரிசிம்மஜோதி தலைமையில் சின்னசேலம் போலீசார் தொடர் சாராய ரெய்டில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தகரை கிராமத்தில் சின்னசேலம் போலீசார் ரெய்டு செய்தபோது தகரை கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி(34) என்பவர் சாராயம் விற்றதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 250மிலி அளவு கொண்ட 40 பாக்கெட்டுகளில் இருந்த சுமார் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

The post கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: