சேலம் சிறையில் டிஐஜி ஆய்வு

சேலம், மார்ச் 26: சேலம் மத்திய சிறையில் ஆண்டுதோறும் வார்டர்களுக்கான கவாத்து நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அணிவகுப்பு நேற்று சிறை வளாகத்தில் நடந்தது. கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சில நாட்களுக்கு முன்பு கைதிகளிடம் இருந்த 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். எந்த வழியில் சிறைக்குள் செல்போன் வந்தது? எனவும் விசாரித்தார். 2வது நாளாக இன்றும் விசாரணை நடத்துகிறார்.

The post சேலம் சிறையில் டிஐஜி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: