நீலகிரியில் எல்.முருகன் உட்பட நேற்று 6 பேர் வேட்புமனு தாக்கல்

 

ஊட்டி,மார்ச்26: நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு எல்.முருகன் உட்பட நேற்று 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. நேற்று, பாஜக., வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரை தொடர்ந்து, அதிமுக.. சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், அதிமுக சார்பில் வையாபுரி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். சுயேச்சை வேட்பாளர் முருகேசன், இந்திய கன சங்கம் கட்சி வேட்பாளர் பத்திரன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் இரண்டு வேட்பு மனுவும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் 3 மனுவை தாக்கல் செய்தனர்.

The post நீலகிரியில் எல்.முருகன் உட்பட நேற்று 6 பேர் வேட்புமனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: