சென்னை திரும்பியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் சென்று திமுக வேட்பாளரை ஆதரித்து காஞ்சிபுரம் பெரியார் தூண் காந்தி சாலையில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார்.
மேலும் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்கிறார். அதன்பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதிக்கு உட்பட்ட செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய ஊர்களில் பேசுகிறார்.
இரவில் திருவண்ணாமலை கீழ் பெண்ணாத்தூர் பஸ் நிலையம் அருகே பேசுகிறார். தொடர்ந்து நாளை அவர் திருவண்ணாமலை, வேலூரிலும், 27ம் தேதி அரக்கோணம், பெரும்புதூரிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து அவர் இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று பிரசாரம்: ஆரணி, திருவண்ணாமலையிலும் வாக்கு சேகரிக்கிறார் appeared first on Dinakaran.