கற்பக விநாயகா கல்லூரியில் பெண்களுக்கு விருதுகள்

 

மதுராந்தகம், மார்ச் 24: கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே செயல்பட்டு வரும் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை கவுரவிக்கும் விதமாக ‘மாதரே டி 24’ எனும் விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் பேச்சாளர் பாரதி பாஸ்கர் தலைமை தாங்கினார்.

கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை, முதல்வர் காசிநாத பாண்டியன், டீன் சுப்பாராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் விழாவில் அசோசியேட்ஸ் டீன் செந்தில்குமார், முனைவர்கள் தினேஷ்குமார், சிவகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இவ்விழாவில் பல்வேறு துறை சார்ந்த பெண் வல்லுநர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் சாதனையாளர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதோடு ஒட்டு மொத்த சமூகத்திற்கும் உத்வேகமாக அமைய இக்கல்லூரியில் இத்தகைய விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

The post கற்பக விநாயகா கல்லூரியில் பெண்களுக்கு விருதுகள் appeared first on Dinakaran.

Related Stories: