சுனைநீரில் மூழ்கி முதியவர் பலி

தோகைமலை, மார்ச் 24: தோகைமலை காவல் சரகம் கழுகூர் ஊராட்சி மேலக்கம்பேஸ்வரம் நாதப்பன் மகன் பெரியசாமி ( 75) இவர் கடந்த 6 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த பொியசாமி, குளிக்கச் சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்து விட்டுசென்றுள்ளார். பின்னர் பெரியசாமி இரவு 8 மணிவரை வீட்டிற்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சுற்றுப்புறங்களில் தேடி பார்த்து உள்ளனர்.அப்போது அருகில் உள்ள பெருமாள் பாறையில் உள்ள சுனை நீர் அருகில் பெரியசாமியின் உடைகள் மற்றும் அவர் அணிந்து இருந்த காலணிகள் இருந்து உள்ளது.

இதனால் பெரியசாமி சுனைநீரில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த உறவினர்கள் தோகைமலை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சுனை நீரில் இறங்கி தேடிபார்த்தனர். அப்போது நீண்ட நேரத்திற்கு பின்னர் பெரியசாமியின் உடலை சுனை நீரில் இருந்து மீட்டனர். இது குறித்து பெரியசாமியின் மருமகள் வீரமணி தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் பெரியசாமியின் உடலை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சுனைநீரில் மூழ்கி முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: