மனைவி இறந்த சோகம் தாளாமல் தொழிலாளி தற்கொலை

சேலம், மார்ச் 24: சேலம் கருப்பூர் சாமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சித்தையன்(57). இவர் மாமாங்கம் பகுதியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, இவரது மனைவி இறந்து விட்டார். அதன் பின்னர், அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை, வீட்டில் அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு மயங்கி விழுந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, சித்தையன் உயிரிழந்தார். இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி இறந்த சோகம் தாளாமல் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: