காதலனுடன் தகராறு இளம்பெண் தற்கொலை

சேலம், மார்ச் 24: சேலம் சூரமங்கலம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (32). இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் தனலட்சுமிக்கும், கொல்லப்பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதனை அறிந்த கணவர் தனலட்சுமியை கண்டித்தார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, கணவரை பிரிந்த தனலட்சுமி, தனது தகாத உறவு காதலனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், அவருடனும் தனலட்சுமி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதலனுடன் தகராறு இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: