குளிக்க தண்ணீர் சூடு செய்தபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம், சத்யா நகர், 7வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் ஷியாம் (15). அப்பகுதியில்  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். இந்நிலையில், நேற்று காலை சுடுதண்ணீரில் குளிப்பதற்காக மின்சார வாட்டர் ஹீட்டர் மூலம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்து கொண்டிருந்தார். அப்போது, தண்ணீர் சுட்டு விட்டதா என பார்ப்பதற்காக விரலை தண்ணீரில் விட்டு பார்த்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுவனை கொண்டு சென்று அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த தகவலின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவன் ஷியாம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். …

The post குளிக்க தண்ணீர் சூடு செய்தபோது மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: