1.5 டன் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது

மதுரை, மார்ச் 20: ஒன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர். மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் மதுரை, திருப்பரங்குன்றம் பை-பாஸ் சாலை, பூங்கா பஸ் ஸ்டாப் அருகில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரை நோக்கி வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.

அதில், 51 வெள்ளைநிற பிளாஸ்டிக் சாக்கு பைகளில் தலா, 30 கிலோ எடையில், 1,530 கிலோ அளவிலான ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, அரிசியை கடத்தியதற்காக ஆட்டோவின் உரிமையாளரான மதுரை, சோலையழகுபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (32), ஓட்டுநரான ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சந்தானம் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அரிசி மூட்டைகள் மற்றும் அவற்றை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

The post 1.5 டன் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: