கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அனுமார் கோயில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

கறம்பக்குடி,மார்ச் 20: கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அனுமார் கோயில் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அனுமார் கோயில் அரசு தொடக்க பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இது தொடர்பாக அனுமார் கோயில் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் விசுவாசம் மற்றும் பேரூராட்சி 9 வதுவார்டு கவுன்சிலர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இப்பேரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாலை, அனுமார் கோயில் சாலை மற்றும் அக்ரஹாரம் முக்கிய வீதிகள் வழியாக பள்ளி சென்றது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அனுமார் கோயில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: