போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

சோழிங்கநல்லூர்: எம்கேபி நகரில் வலி நிவாரணி மாத்திரைகளை சிலர், போதைக்காக விற்பதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்ததன்பேரில், நேற்று முன்தினம் மாலை, எம்கேபி நகர் 19வது மத்திய குறுக்கு தெருவைச்சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, அவர்களிடம் 12 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது. விசாரணையில், எம்கேபி நகர் 15வது மத்திய குறுக்கு தெருவை சேர்ந்த தர்ஷன் (22), கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த முகமது மஜீத் (22) என்பதும், இவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, போதைக்காக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

இதில், முகமது மஜீத் ஏற்கனவே போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் சிறைக்கு சென்று கடந்த 2 தினங்களுக்கு முன்புதான் வெளியே வந்தார். இதையடுத்து, இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: