இந்நிலையில், குழந்தைகளை பராமரித்து வந்த இந்திராணியின் தோழியும், அவரது கணவரும் சேர்ந்து பெல்ட்டால் அடித்து குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக அக்கம், பக்கத்தினர் குழந்தைகள் நல வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நல அதிகாரிகள் காயம் அடைந்த 2 குழந்தைகளையும் மீட்டனர்.
இதுகுறித்து திருவேற்காடு போலீசில் குழந்தைகள் நல அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில், திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்தப்பட்டது உறுதியான பிறகு இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
The post தோழியின் குழந்தைகளை தாக்கியதாக தம்பதி மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.