ஆனால், தேர்தல் நடத்தை விதிகளால் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிமாநில வியாபாரிகள் வருகை பாதிக்கும் மேல் குறைந்துவிட்ட நிலையில் சிறு, குறு வியாபாரிகள் மட்டுமே துணிகளை வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை பாதியாக குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். தேர்தல் முடியும் வரை இதேநிலை நீடிக்கும் என்பதால் ஜவுளி வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
The post தேர்தல் கட்டுப்பாடுகளால் தள்ளாடும் ஈரோடு ஜவுளி வாரச்சந்தை: வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை appeared first on Dinakaran.