மதுபானம் பதுக்கி விற்ற 3 பேர் கைது

கடத்தூர், மார்ச் 19: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தர்மபுரி, பொம்மிடி சாலையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்தவர்களை நிறுத்தி, எஸ்ஐ புவனேஸ்வரி சோதனை நடத்தினார். அதில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க, பதுக்கி கொண்டு சென்றது தெரிய வந்தது. இதயைடுத்து அஸ்திகரியூர் தர்மலிங்கம் (57), மணியம்பாடி பாபு (40), சுங்கரஅள்ளி வெள்ளையம்மாள் (70) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 78 மதுபாட்டில்கள் மற்றும் 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

The post மதுபானம் பதுக்கி விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: