செஞ்சி கிழக்கு ஒன்றிய விசிக செயலாளர் ஒழுங்கு நடவடிக்கை நீக்கம்

செஞ்சி, மார்ச் 19: செஞ்சி கிழக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராசாராம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் வருத்தம் தெரிவித்து மேல் முறையீடு செய்ததன் அடிப்படையில் இதனை ஏற்றுக்கொண்டு, இவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. இவர் மீண்டும் செஞ்சி கிழக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார். இவருடன் கட்சி பொறுப்பாளர்கள் இணக்கமாக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கையில்
கூறியுள்ளார்.

The post செஞ்சி கிழக்கு ஒன்றிய விசிக செயலாளர் ஒழுங்கு நடவடிக்கை நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: