அதன் பின்னர் கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த விஏஓ தேர்தல் விதிமுறைகளை மீறி கொடி ஏற்றி பிரியாணி எப்படி வழங்கலாம் என கேட்டபோது, ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் மீண்டும் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, நெற்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் குமார் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சிக்கொடி ஏற்றக்கூடாது என்றும், அதேபோல் எந்த கட்சி சார்பாகவும் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும் தெரிவித்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் அதிமுக கொடி ஏற்றி பிரியாணி வழங்கி உள்ளனர்.
இதைக்கேட்டபோது அதிமுக தொண்டர்கள் மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். எனவே தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிந்து, தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரை செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் 148வது வார்டு திமுக முன்னாள் வட்ட செயலாளர். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்துள்ளார். இதையொட்டி தேர்தல் விதிமுறை மீறி போலீசார் அனுமதி இல்லாமல் அதிமுக கொடி ஏற்றி அன்னதானம் வழங்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கொடியேற்றி 200 பேருக்கு அன்னதானம் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தேர்தல் விதிமீறல்: போலீசில் விஏஓ புகார் appeared first on Dinakaran.