போலீசாரையும் அந்த வாலிபர் கத்தியை காண்பித்து, என்னை நெருங்கினால், உங்களையும் வெட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டி தப்பியோட முயன்றார். அப்போது பொதுமக்கள் உதவியுடன் போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து கத்தியை பறிமுதல் செய்தனர். பின் அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், கத்தியை காட்டி மிரட்டியவர் திருத்தணி சித்துார் சாலையை சேர்ந்த சாய் கல்யாண்(25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து சாய்கல்யாணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது appeared first on Dinakaran.