ஆண்டிமடம் ஒன்றியம் பட்டணங்குறிச்சி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

 

ஆண்டிமடம், மார்ச்16: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் பட்டணங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் வரவேற்றார். அப்போது அவர் பள்ளியில் சேர்ந்த ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளுக்கு மாலை அணிவித்தும், பலூன், பிஸ்கட், சாக்லேட், பழம்,பூ, வெற்றிலை பாக்கு, பிளேட் போன்ற பொருட்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி பள்ளியின் சிறப்பம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பெற்றோர்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து சிவலிங்கபுரம், காட்டு கேணி, இந்திரா நகர், சவர்வெளி ஆகிய இடங்கள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆண்டிமடம் ஒன்றியம் பட்டணங்குறிச்சி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி appeared first on Dinakaran.

Related Stories: