48 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு

 

தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரியில் நடந்த நுகர்வோர் தின விழாவில், 48 பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில், நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமையில் அனைவரும், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து 48 பயனாளிகளுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் நசீர் இக்பால் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 48 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு appeared first on Dinakaran.

Related Stories: