வண்ணார்பேட்டையில் மலைப்பாம்பு சிக்கியது

நெல்லை, மார்ச் 16: வண்ணார்பேட்டையில் செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே உள்ள வேகத்தடையில் சாலையின் குறுக்கே நேற்று காலை மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. மேற்கில் இருந்து கிழக்காக சாலையின் குறுக்கே சென்ற அந்த அங்குள்ள தனியார் கடையின் பார்க்கிங் பகுதிக்கு சென்றது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து 6 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் மலைப்பாம்பு சேரன்மகாதேவி பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பாதுகாப்பாக விடப்பட்டது.

The post வண்ணார்பேட்டையில் மலைப்பாம்பு சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: