நெல்லை அருகே வியாபாரியை கொல்ல முயற்சி

நெல்லை, மார்ச் 16: தாழையூத்து, சங்கர் நகர் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் தங்கபாண்டி (60). இவர், இப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு சங்கர் நகரைச் சேர்ந்த ஹரிப்பாண்டி என்பவர் வந்துள்ளார். அப்போது சிகரெட் வாங்குவது தொடர்பாக ஹரிக்கும், தங்கபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஹரி அரிவாளால் கடையை சூறையாடி தங்கபாண்டியையும் வெட்ட முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து அவர், தாழையூத்து போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் விசாரணை நடத்தி ஹரியை தேடி வருகிறார்.

The post நெல்லை அருகே வியாபாரியை கொல்ல முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: