மயிலாடுதுறை, மார்ச் 15: மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட ஐயன்குளம் மற்றும் அரண்மனைக்குளம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரண்மனைக்குளம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.59.08 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருவதையும், ஐயன்குளம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.
மேலும், குளத்தை சுற்றி நடைபாதை, குளக்கரைகளுக்கான தடுப்பு சுவர்கள், மின் விளக்குகள் ஆகியவைகள் குறித்து மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆணையரிடம் விரிவாக கேட்டறிந்து, பணிகளை ஒப்பந்த கால கெடுவிற்குள் விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் சங்கர் உடனிருந்தார்.
The post ஐயன்குளம் மேம்பாட்டு பணி: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.