குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா

தென்காசி, மார்ச் 15: தென்காசி குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட வேதம்புதூரில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு இணங்க ஊராட்சி தலைவர் சத்யராஜ் ஏற்பாட்டில் தென்காசி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் சத்யராஜ் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி ஒன்றிய கவுன்சிலர் அழகுசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் பிரியா, வார்டு உறுப்பினர்கள் சந்திரா, மைதீன்பாத் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: