உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளி நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்

 

ஜெயங்கொண்டம், மார்ச் 14: தேர்வு நேரத்தில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் முன்னாள் தலைமையாசிரியர் மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.உடையார்பாளையம் அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளியில் 2023-2024ம் கல்வி ஆண்டு அரசு பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ .க.சொ, க.கண்ணன் சொந்த நிதியில் எழுதும் பொருட்கள் வழங்கியதை மாணவிகளுக்கு வழங்கி பாராட்டப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியை தலைமையாசிரியர் முல்லைக்கொடி ஆலோசனைப்படி ,பள்ளி பொறுப்பு ஆசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். ஆசிரியர்கள் இங்கர்சால், ரகுபதி, சாந்திமஞ்சுளா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமாரன் கலந்து கொண்டு எழுதுபொருட்கள் வழங்கி, தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் தேர்வுநேரத்தில் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக இருக்க வழிமுறைகளை எடுத்து கூறினார். இதில் வகுப்பு ஆசிரியர்கள் தமிழரசி, பாவை சங்கர், இராஜசேகரன் மாணவிகளை வாழ்த்தினார்கள்.

The post உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளி நிகழ்ச்சியில் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: