தென்காசி: தென்காசி அச்சம்பட்டியில் தனியார் வாகன ஓட்டுநர் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநரை சங்கரன்கோவில் டவுன் போலீசார் அடித்து கொன்றதாக உறவினர்கள் புகார் அளித்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றபோதே ஓட்டுநர் இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.