துறையூரில் விவசாயி கொலை வழக்கில் தம்பி கைது

 

துறையூர், மார்ச் 13: துறையூர் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை வழக்கில் தம்பியை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(57). பால் வியாபாரி. இவரது தம்பி சந்திரசேகர்(52). லாரி டிரைவரான இவர் தற்போது வேலை எதுவும் செய்யாமல் பெருமாள்பாளையத்திலேயே இருந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 2 ஏக்கர் நிலத்தை பிரித்ததில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2020ல் சந்திரசேகரை தாக்கியது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாகவும், அதில் இருந்து அண்ணன்-தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தியை சந்திரசேகர் வழிமறித்து தாக்கினார். அவரிடமிருந்து தப்பி ஓடிய கிருஷ்ணமூர்த்தியை, சந்திரசேகர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவத்தில் சந்திரசேகருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து சந்திரசேகரை போலீசார் நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post துறையூரில் விவசாயி கொலை வழக்கில் தம்பி கைது appeared first on Dinakaran.

Related Stories: