நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம்

நெல்லை, மார்ச் 13:நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கனாங்குளம் ஊராட்சி சிவந்தியாபுரம், பட்டறைகட்டிவிளை உள்ளிட்ட கிராமங்களில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரசாரம் நடந்தது. அப்போது ஒன்றிய திமுக செயலாளர் சுடலைக்கண்ணு, வடைகளை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் வாசுதேவ பண்ணையார், மறுகால்குறிச்சி ஊராட்சி துணைத்தலைவர் புஷ்பபாண்டி, கவுன்சிலர் நல்லாசிரியர் அகஸ்டின் கீதாராஜ், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், ஒன்றிய துணைச்செயலாளர் துரைராஜ் அருணாச்சலம்மாள், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மாயகிருஷ்ணன், ஒன்றிய பிரதிநிதி பரமசிவம், கிளைச் செயலாளர்கள் முருகன், நல்லதம்பி, கொம்பையா, துரை, பாக முகவர்கள்-2 பொறுப்பாளர் ஆல்ட்ரின், எபனேசர், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் 21 நபர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: