இதேபோல், அஜ்மலுக்கு சொந்தமான கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரியபடுத்தியதை தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மளிகை கடை, துணி மற்றும் செருப்பு கடையில் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் மளிகை கடையில் இருந்து ரூ.7 ஆயிரம் ரொக்கம், செருப்பு மற்றும் துணிகடையில் இருந்த பேன்ட் சட்டை, செருப்பு என ரூ.22 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக ராமசாமி, அஜ்மல் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கபெருமாள்கோவில் பேருந்து நிலையம் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்த இரண்டு கடையின் பூட்டை உடைத்து பணம் துணிகள் செருப்புகள் திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post 2 கடைகளை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.