அப்போது, அவர்கள் சென்ற வழியில் மதுபோதையில் இருந்த 2 பேர், குழந்தையை கடத்திச் செல்கிறாயா என சரவணனிடம் கேட்டு, குழந்தை கடத்த வந்த மர்ம நபர் என கூச்சலிட்டுள்ளனர். இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் சரவணனை சூழ்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனிடையே சிறுமியிடம் விசாரித்தபோது, என்னை அழைத்துச் செல்பவர் என் தந்தை என கூறியுள்ளார். இதனைக் கேட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை சரவணன் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் மது போதையில் இருந்த இரு ஆசாமிகள் தவறான தகவல்களை பரப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். குழந்தை கடத்தும் ஆசாமி என கருதப்பட்டு மகளுடன் வந்த தந்தை, பொதுமக்களால் தாக்கப்பட்ட இந்த சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post குழந்தை கடத்தும் ஆசாமி என தவறாக நினைத்து மகளுடன் வந்த தந்தைக்கு சரமாரி அடி உதை appeared first on Dinakaran.