இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கொரட்டூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிவாவை தாக்கியது அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (24) என்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து நேற்று குடிபோதையில் சாலையில் சுற்றிக் கொண்டிருந்த உதயகுமாரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
The post ஓசியில் சிக்கன் பக்கோடா தர மறுத்ததால் கடைக்காரருக்கு கத்திக்குத்து: போதை வாலிபர் கைது appeared first on Dinakaran.