அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக நாளை அனுமதி பெறப்பட்டுள்ளது. முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்துள்ளதால் நாளை அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளோம். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. நாளை அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு பதினோரு முப்பது மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நளினி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் பாஸ்போர்ட் பெற இலங்கை தூதரகம் அழைத்துவர ஏற்பாடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.